சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக ஏமாற்றும் நடவடிக்­கையில் ஈடு­படும் குழுக்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கையில் ஈடு­படும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக மோச­டியில் ஈடு­படும் குழுக்கள் பொதுமக்­க­ளிடம் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு, தம்மை தபால் பொதி சேவையாளர் என தெரிவித்து, அல்லது சீட்டிழுப்பில் பரிசு கிடைத்துள்ளதாக கூறி அவற்றை பெற்றுக்கொள்­வ­தற்­கான பணத்தை செலுத்தி பொருட்­களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கின்றனர்.

அந்த பணத்­தொ­கையை அவர்கள் குறிப்­பிடும் வங்கி கணக்கில் வைப்பு செய்­யு­மாறு கூறி பணம் வைப்­பி­லி­டப்­பட்­டதன் பின்னர் தொடர்பை துண்­டித்து விடு­கின்­றனர்.

இவ்­வாறு வெளி­நாட்­ட­வர்கள் என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக்கொண்டு சிலர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இவ்­வா­றான மோசடி செயல்கள் கார­ண­மாக வெளி­நா­டு­களில் வசிக்கும் இலங்கையர்களும் உள்நாட்டவர்களும் கணிசமான அளவு பணத்தை இழந்து வருவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *