
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, யாழில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இரு தேர்தல் பிரசார கூட்டங்கள் இன்று (திங்கட்கிழமை) யாழில் நடைபெறவுள்ளன.
இந்த இரு கூட்டங்களிலும் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு கோரும் வகையில் உரை நிகழ்த்தவுள்ளார்.
முதலாவது ஆதரவு பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதேபோன்று இரண்டாவது பிரசாரக் கூட்டம் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் இன்று பிற்பகல் 6 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply