மதுவரித் திணைக்களத்தின் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்தின் வாகனத்தை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலேயே அதில் பயணித்த தகவலாளர் காயமடைந்துள்ளார்.

பாரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கும் மதுவரித் திணைக்களத்தினருக்கும் ஒரேநேரத்தில் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தொடர்பாடலற்ற தேடலை பொலிஸார் மேகொண்டுள்ளனர். அதேவேளை மதுவரித் திணைக்களத்தினரும் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸாரின் வாகனத்திற்கு முன்பாக, மதுவரித் திணைக்களத்தினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனம் குறித்த போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைக்காக வேகமாக பயணித்துள்ளது.

இந்நிலையில் குறித்த வாகனத்திலேயே போதைப்பொருள் கடத்தப்படுவதாக எண்ணிய பொலிஸார் அதனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் அந்த வாகணத்தில் பயணித்த 38 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவர் காயமடைந்துள்ளார்.

அவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *