தன்னிச்சையாக செயற்பட்டு மக்களை திசை திருப்பும் தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு கடும் தண்டணை

இலங்கையில் உள்ள அரச ஊடகங்கள் மற்றும் தனியாா் ஊடகங்கள் தாம் விரும்பிய வாறு கட்சி சாா்பாக செயற்படுதல் மற்றும் மக்களை திசை திருப்பும் தவறான செய்தி பிரசுரங்களுக்கு கடுமையான தண்டணை வழங்கப்படும்.

இது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 19 வது அரசியல் திருத்த சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இன்று முதல் ஒரு வார காலம் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகள் உட்பட ஊடகங்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தன்னிச்சையாக செயற்படும் ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, மூன்று வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் அறிவிடப்படும் என எச்சரித்துள்ளார்.இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்ரிய இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *