
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை சற்று முன்னர் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெயர்ப்பலகையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரை நீக்கம் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரையிறங்கியுள்ளது.
இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த அலைன்ஸ் எயார் நிறுவனத்தின் விமானமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply