யாழ் விமான நிலையத்தில் சிங்கள மொழி பின் தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் விசனம்

யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்ப் பலகைகளில் முதலில் தமிழ் மொழியிலும் இரண்டாவதாக சிங்கள மொழியிலும் மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சிங்கள மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறித்து பலரும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் இன்றைய தினம் குறித்த சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் யோசனைக்கு அமைய பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *