கடந்த 8 மாத காலப்பகுதியில் 238 கோடி அமெரிக்க டொலர் வருமானம்

கடந்த 8 மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி அமெரிக்க டொலர் வருமானமாக பெறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 27 கோடி அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பி வருகின்றது. 

கடந்த ஓகஸ்ட் மாத்தில் 143,587 சுற்றலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இத் தொகை 24.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *