யாழில் டெங்கு நோய் பரவும் அபாயம் – டெங்கு காய்ச்சலால் இதுவரையில் 74 பேர் உயிரிழப்பு

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக அந்த பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரித்தார்.

டெங்கு நோயினால் இந்த வருடத்தில் 74 பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 55,723 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் கடந்த 17 ஆம் திகதி வரையில் 3,998 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாகணத்தில் மாத்திரம் 26,666 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *