ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது!

திருச்சி – நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், சிறுவனை மீட்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாகவே சுர்ஜித் மீண்டு வரவேண்டும் என பலரும் பிரார்தனை செய்து வந்த நிலையில், சுர்ஜித்தின் மரணம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீண்ட நேர போராட்டத்தின் பின் சுர்ஜித்தின் உடல் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.

சுர்ஜித்தின் உடல் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறுவன் சுர்ஜித்தின் மரணம் பல்வேறு தரப்பினரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *