பிரதமர் ரணில் பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானம்..?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

பெரும்பாலும் நாளைய தினம் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளைய தினம் புதிய அமைச்சரவை பதவிப் பிரமானம் செய்துகொள்வதற்காக இடமளிக்கும் வகையில் அவர் இவ்வாறு பதவி விலகுகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *