மன்னாரில் தங்க நகைகளுக்கு தரச்சான்றுதல் வழங்கப்படுவதில்லை என முறைப்பாடு

மன்னார் மாவட்டத்தில் உள்ள சில நகை தொழிலகங்களில் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதாகவும் நகைகளை பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் இன்மையால் மக்கள் ஏமாற்றப்படுவதாக பாதீக்கப்பட்ட மக்கள்    குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள சில பிரபல நகை தொழிலகங்கள் மற்றும் தங்க நகை விற்பனை செய்யும் நிலையங்களில் நகைகளை மக்கள் கொள்வனவு செய்யும் போதும் , அதே நேரத்தில் பழைய நகைகளை அழித்து புதிய நகைகளை செய்யும் போதும் 24 கரட் நகையாக செய்து தருவதாக கோரி பணம் பெறப்படுகின்ற போதும் 18 தொடக்கம் 22 கரட் பவுண்களிளே நகைகள் செய்யப்பட்டு   மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பாதீக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

-மன்னாரில் தங்க நகைகளை தங்கத்தின் தரத்தை பரிட்சித்து பார்க்கக் கூடிய வசதி உள்ள நகை தொழிலகங்களும் ஏனைய நகைக் கடை உரிமையாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பதால் நகைகளின் தரத்தை பரிட்சித்து தருவதற்கு மறுப்பதாகவுவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவசர பண தேவைகளுக்காக நகைகளை அடகு வைக்க வங்கிகள் மற்றும் தனியார் அடகு பிடிக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போதே நகையின் தரம் தொடர்பான உண்மை நிலை தெரிய வருவதாகவும் அதன் பின்னர் சம்மந்தபட்ட நகை கடை உரிமையாளர்களிடம் சென்று கேட்கும் போது காலம் சென்று விட்டது இனி ஒன்றும் செய்ய முடியாது என தெரிவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இவ்விடையம் தொடர்பாக பாதீக்கப்பட்டவர்கள் மன்னார் பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *