கனடாவில் தொடருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

கனடாவின் தொடருந்து சங்க ஊழியர்கள் 72 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடருந்து சங்க ஊழியர்களின் ஒப்பந்தம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வினை வழங்காததன் காரணமாக மேற்படி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பணிப்புறக்கணிப்பில் மூவாயிரம் தொடருந்து ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

கனடாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோதுமை மா மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகியவற்றை வெளிநாட்டு ஏற்றுமதிக்காக துறைமுகங்களுக்கு கொண்டு செல்வதற்கு தொடருந்து சேவைகளையே பயன்படுத்திகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *