
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறும் இந்த சந்திப்பின்போது, தாங்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம் என்ற தகவலை அவரிடம் கூறுவார் என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு வழங்க ஐ.தே.க. நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் அவை தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுத் தேர்தலை பெப்ரவரி 15 அல்லது அதற்குப் பின்னர் நடத்துவதற்கு உடன்பட்டால், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழு அதுகுறித்து பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 24 மணி நேரத்துக்குள் பிரதமர் பதவி விலகுவார் என்று கூறியிருந்த போதிலும் இதில் தாமதம் ஏற்படக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கான நேரம் இதுவரை பிரதமருக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பதவிகளை கைவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஐ.தே.க. பிளவுபடப்போகிறது என்பது வெறும் வதந்திதான் என்றும் அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply