வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழில் இருந்து வவுனியா நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்திசென்ற ஒருவரை வவுனியா போதை தடுப்பு பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரை வவுனியா  பழைய பேருந்துநிலையத்திற்கு அண்மையில் கடமையில் இருந்த பொலிசார் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.,  
இதன்போது குறித்த நபரின் பயண பொதியில் இருந்து   2கிலோ 800கிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *