ஜனாதிபதியான மறுநாளே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள கோட்டா!

7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சில அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளார்.

குறிப்பாக தான் பயணம் செய்யும்போது வீதிகளை மூட வேண்டாம் என்றும் தனது பாதுகாப்பிற்கு இரு வாகனங்கள் இருந்தால் மட்டும் போதும் என்றும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் ஊழியர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இவ்வளவு காலமாக செயற்பட்டுவந்த பல ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக 1200ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையினை 200ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்தோடு தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களையும் குறைத்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *