
பங்களாதேஷ் அணியின் வேகபந்து வீச்சாளர் சஹாடட் ஹொசைனுக்கு 2 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஐந்து வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய கிரிக்கட் லீக் போட்டி ஒன்றில் சக வீரரான அரபாத் சன்னியை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து அவர் அந்த போட்டியிலிருந்து விலகியிருந்தார்.
இந்த குற்றமானது சர்வதேச கிரிக்கட் விதிகளில் நான்காம் அடுக்கு குற்றமாக பார்க்கப்படுவதுடன் அதன்படி 1200 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply