சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்!

சஜித் பிரேமதாஸவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கட்சியை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க வேண்டுமானால் ரணில் விக்ரமசிங்க புதிய ஒருவருக்கு தலைமைத்துவ பதவியை வழங்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி பூரண மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற குழுவின் கருத்துக்களை கேட்காவிட்டால் அதேபோல் சஜித் பிரேமதாசவிற்கு தலைமைத்துவத்தை கையளிக்காவிட்டால் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் இரக்குவானை தொகுதி அமைப்பாளர் பதவியில் விலகுவேன்.

ஆகவே, ரணில் விக்ரமசிங்க கட்சி ஆதரவாளர்களின் கருத்தை புரிந்து கொண்டு கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *