
திருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸ உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர்களை இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியப்போது, அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸ உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை- சமுத்திரகம பகுதியைச் சேர்ந்த 31,19,21 மற்றும் 20 வயதுடைய ஆறு பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபர்களுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் மீன் பிடி தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை கொட்டுவ வீதி பகுதியைச் சேர்ந்த நிசான் குரூஸ் (25வயது) மற்றும் பிரதீப் குமார (23 வயது) ஆகியோர் காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரை கைது செய்து, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியப்போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave a Reply