புதிய தொழில் வாய்ப்பு குறித்து நீரியல் ஆய்வு நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு

நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கக் கூடிய திட்டங்கள் தொடர்பாக துறை சார்ந்தவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்துள்ளார்.

குறித்த செயற்றிட்டங்களை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் முகமாக இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதற்கும் அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கும் நோக்கிலும் இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கலர் மீன் வளர்ப்பு தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பணிகளை மேலும் திறம்பட முன்னெடுப்பது தொடர்பாகவும் துறைசார் நிபுணர்களுடன் ஆராயப்பட்டது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *