கடலில் தவறி விழுந்து இளைஞன் உயிரிழப்பு

மன்னார் தாழ்வுபாடு கடலில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போது மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பெப்சிகர் பீரிஸ் (வயது-23) என்ற இளைஞன் சக மீனவருடன் தாழ்வுபாடு கடலில் கண்ணாடி இழை படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

குறித்த படகினை அந்த இளைஞரே ஓட்டிச் சென்றுள்ளார். இதன்போது இளைஞன் படகிலிருந்து திடீரென கடலில் தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்க சக மீனவர்கள் முயற்சித்துள்ளனர். எனினும் அவர் சடலமாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *