கிளிநொச்சியில் பலத்த மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சியில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு ஆரம்பித்த மழை இடையிடையே பலத்த மழையாக பெய்து வருகின்றது. இதனால் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. கிளிநாச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆற்றினை மக்கள் கடப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர் அமட்டமும் அதிகரித்து வருகின்றது. தொடர் மழை காரணமாக பெரும் சிரமங்களை மக்கள் எதிர் கொள்கின்றனர். பாடசாலையின் இறுதி ஆண்டு பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் பாடசாலை மாணவர்களும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *