டோனி.. கோஹ்லி உட்பட 7 இந்திய வீரர்களை எங்கள் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்: பிசிசிஐ-யிடம் வங்கதேசம் கோரிக்கை

ஆசியா லெவன் அணிக்காக விளையாட டோனி உட்பட 7 இந்திய வீரர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டி பிசிசிஐ-யிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் 18 மற்றும் 21ம் திகதிகளில் வங்கதேச தலைவர் டாக்காவில் நடைபெறவிருக்கும் ஆசியா லெவன்-உலக லெவன் அணிகளுக்கு இடையேயான டி-20 ஆட்டத்தில் ஏழு இந்திய வீரர்களை இடம்பெறும் யோசனையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் முன்வைத்துள்ளது.

டோனி தவிர, விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ஹார்டிக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய கிரிக்கெடெ் வீரர்களை அனுமதிக்க கோரி வங்கதேச கிரிக்கெட் வாரியமான பிசிபி கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசியா லெவன் மற்றும் உலக லெவன் அணிகள் இடையே இரண்டு டி-20 சர்வதேச போட்டிகளை நடத்த வங்கதேசம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஆட்டங்களில் தங்கள் வீரர்களை பங்கேற்க அனுமதிக்க கோரி பிசிசிஐ மற்றும் ஆசிய பிராந்தியத்தின் பிற கிரிக்கெட் வாரியங்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என்று பிசிபி தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கால அட்டவணையைப் பொறுத்தவரை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 18ம் தேதி நடைபெறுகிறது.

இதனால், கோஹ்லி, ரோகித், ஹார்டிக் மற்றும் பிற முக்கிய வீரர்களுக்கு அனுமதி வழங்க சாத்தியமற்றதாக்குகிறது. டோனியைப் பொறுத்தவரை, அவர் இனியும் தேசிய அணிக்கு பரிசீலிக்கப்படாததால், ஆசியா லெவன் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *