
இந்தியாவின் கார்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் இன்று (புதன்கிழமை) விண்ணில் பாய்கிறது.
விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து காலை 9.28 மணிக்கு ரொக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது.
1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன கார்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இது அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயர்தரத்திலான் ஒளிப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டது.
அதாவது வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியைத் தெளிவாகப் ஒளிப்படம் பிடிக்கும் என்பதுடன், இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது.
இந்த செயற்கைக்கோள். பேரிடர் பாதிப்பு முன்னெச்சரிக்கைக்கு மட்டுமின்றி, இராணுவ எல்லைப் பாதுகாப்புக்கும் இந்த செயற்கைக்கோள் உதவவுள்ளது. இது 5 ஆண்டுகள் செயற்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-47 ரொக்கெட் சுமந்து செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply