
இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைனி ஜொரன்லி எஸ்கடலிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று(புதன்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அலி அல் முஆலாவும் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Leave a Reply