
பூநகரி- செல்விபுரம் வீதி வளைவில் இடம்பெற்ற வாகன விபத்தில், நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனமே நேற்று (வியாழக்கிழமை) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்த குறித்த கெப் ரக வாகனம் வீதி ஓரத்தில் இருந்த மரமொன்றுடன் மோதியுள்ளது. இதன்போது வாகனத்தில் பயணித்த நால்வரில், இருக்கையில் அமர்ந்து பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மூவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் பூநகரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் கடந்த 23.11.2019 அன்று இரு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி நால்வர் படுகாயடைந்தமை குறிப்பிடதக்கதாகும்.


Leave a Reply