
தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டீனாவில், நபர் ஒருவர் போன் நோண்டிக்கொண்டே சென்று தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புவெனஸ் அயர்ஸில் உள்ள அகுரோ டி லைன் நிலையத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
நிலையத்தில் இருந்த சிசிடிவி பதிவான காட்சி வெளியாகியுள்ளது. அதில், நடைமேடையில் போன் நோண்டிக்கொண்டே செல்லும் 49 வயதான நபர், கவனக்குறைவால் தண்டவாளத்தில் விழுகிறார்.
உடனே அங்கிருந்து இரண்டு பயணிகள் அவருக்கு உதவி மேலே தூக்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அதன் பின்னரே நிலையத்திற்குள் ரயில் வந்துள்ளது.
பின்னர், தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர உதவிக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து ஸ்ட்ரெக்சரில் தூக்கிச் சென்றுள்ளனர். தண்டவாளத்தில் விழுந்த நபர் குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
Leave a Reply