
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்புச் செயலாளரான கமல் குணரத்ன சந்தித்துள்ளார்.
நேற்று மாலை அலரி மாளிகையில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிரதமர் பதவியேற்றதை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளருடன் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.
இதன்போது, பிரதமருக்கு பாதுகாப்புச் செயலாளர் நினைவு பரிசொன்றையும் வழங்கி வைத்தார்.
இதேவேளை, பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவும் நேற்று பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுமங்கலா டயஸ் மற்றும் பதில் காவல்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவும் நேற்றைய தினம் பிரதமரை சந்தித்ததாக பிரதமர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
Leave a Reply