
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 1014ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் முன்னெடுக்கப்பட்டது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது போராட்டத்திற்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுதர வேண்டும் என தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.
Leave a Reply