கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி

கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியில் 22 வயதான அதே பகுதியை சேர்ந்த மின்சாரம் தாக்கி யாழ் பல்கலைக்கழக மாணவன் பலியாகியுள்ளார்.

சிவநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தைக்கு சொந்தமான அரிசி ஆலையில் குறி்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரசி ஆலையில் உள்ள பகுதி ஒன்றில் வெள்ள நீர் காணப்பட்டுள்ளது. குறித்த வெள்ள நீலை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மின் தாக்கத்திற்கு உள்ளான குறித்த இளைஞனை மயக்கமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த இளைஞன் யாழ் பல்கலைக்கழக மாணவனான விக்னராசா சாரங்கன் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *