19ஆவது திருத்தச் சட்டம் குறித்து கலந்துரையாட தயார் – ஹக்கீம்

19ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பாக கலந்துரையாட தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரத்திற்கும் அரசியல் யாப்புக்கும் இடையில் ஒரு சமநிலை தன்மை பேணப்படுவது சிறந்தது என அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

19ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அதனை இரத்து செய்ய வேண்டுமென அரசாங்கம் தெரிவித்து வருகிறது.

அத்தோடு, ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் ஆட்சி செய்வது கடினமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *