அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் விடுதலை!

முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பாக அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கர ஜயரத்ன விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த போது, சட்ட ரீதியற்ற முறையில் விமான சேவைகள் அபிவிருத்தி திட்டங்களுக்கான அபிவிருத்தி அதிகாரி என்ற புதிய பதவிக்கு அமைச்சரின் தனிப்பட்ட செயலாளரை நியமிப்பதற்கு விமான சேவைகள் பணிப்பாளர் சபையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *