
கதிர்காமம் கந்தனை நோக்கிய பாதயாத்திரை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் வழிபாடுகளுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.
இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை, யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.
நாட்டில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம், அமைதி ஏற்பட இறையருள் வேண்டி குறித்த பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply