
பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் விடுத்த அழைப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாட் மஹ்மூத் குரைஸி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்தார்.
அலரி மாளிகையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போதே பிரதமர் மஹிந்தவிடம் அவர் இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.
மேலும் இதன்போது பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் விஷேட கடிதம் ஒன்றையும் பிரதமரிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply