அரசியலமைப்புப் பேரவை எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ளது!

அரசியலமைப்புப் பேரவை எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசருக்கான பெயரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிந்துரை செய்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் வழமையாக கூடும் அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் கலந்து கொள்வார்.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் இன்றி, அரசியலமைப்புப் பேரவை கூடவுள்ளது.

இதன் ஊடாக, அதன் செயற்பாடுகளுக்கு சட்டரீதியான தடைகள் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்க் கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *