
இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் தொடரான சையத் முஷ்டக் அலி டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில், மனிஷ் பாண்டே அடித்த சிக்ஸர் பந்தை ரசிகர் ஒருவர் திருடிக் கொண்டு ஓடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சையத் முஷ்டக் அலி டி 20 தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடக அணியும், தமிழ்நாடு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய கர்நாடக அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ஓட்டங்கள் குவித்தது. அதன்பின்னர் 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணி கடுமையாக போராடி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப்போட்டியில் கர்நாடக அணியின் தலைவர் மனிஷ் பாண்டே 45 பந்துகளில் 60 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் கர்நாடக அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு ஓவரில் முருகன் அஸ்வின் வீசிய பந்தை மனிஷ் பாண்டே மாலய சிக்சர் அடித்தார். மனிஷ் பாண்டே வானுயர அடித்த அந்த பந்து மைதானத்திற்கு சற்று வெளியே சென்று விழுந்தது.
உடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அந்த பந்தை எடுத்து வர ஓடினார்கள் ஆனால் அதற்குள் மைதானத்தின் வெளி பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு ரசிகர் அந்த பந்தை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தார் அந்த ரசிகரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Leave a Reply