காங்கேசன்துறை கடலில் தென்னிலங்கை இளைஞர் மாயம்!

காங்கேசன்துறை தல்செவன உல்லாசக் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மாத்தறையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இளைஞனுடன் வந்தவர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டையடுத்தே அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *