காத்தான் குடியை சேர்ந்த 63 பேரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் மீண்டும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமையகம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் பயங்கரவாதி சஹ்ரான் காசீம் தலைமையில் இடம்பெற்ற ஆயுத பயிற்சியில் பங்கேற்றதாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்த 63 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கைதான நபர்கள் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது மீண்டும் சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீதவான் நீடித்துள்ளார்.

இதேவேளை இன்றைய விசாரணையில் போது 3 பெண்களும் சந்தேக நபர்களாக ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *