
தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கஜபா ரெஜிமென்ட்டின் முன்னாள் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் யாழ்.பாதுகாப்புப் படைகளின் தளபதி உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
அத்துடன், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு படையின் தளபதியாகவும் அவர் பணியாற்றினார்.
இஸ்ரேலுக்கான இலங்கையின் துணைத் தூதுவராகவும் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் பணியாற்றியுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply