இலங்கை- ஐக்கிய அரபு இராஜ்ஜிய கைதி பரிமாற்று பிரச்சினைக்கு தீர்வு

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கிடையில் கைதிகளை பரிமாற்றிக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜியத்தின் தூதுவர் அஹ்மத் அல்முல்லாஹ், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வை, இன்று (வெள்ளிக்கிழமை) நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கிடையில் நீதிமன்ற துறையில் இருக்கும் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *