
திருகோணமலை – மனையாவெளிப் பகுதியில் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டின் வளாகத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் 4 வயதுடைய செல்வராஜா சினியோன் எனத் தெரியவருகின்றது.
இவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply