
2020 திருமதி உலக அழக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இலங்கைப் பெண்ணுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற திருமதி உலக அழகு ராணி போட்டியில், கொழும்பைச் சேர்ந்த கெரோலினி வெற்றி பெற்றார்.
35 வருடங்களின் பின்னர் இலங்கைப் பெண் ஒருவர் திருமதி உலக அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த வெற்றியை அடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்து, சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
“35 வருடங்களின் பின்னர் உலக திருமதி அழகி வெற்றி மூலம் சர்வதேச கௌரவத்தை தாய் நாட்டிற்கு பெற்றுக் கொடுத்த கெரோலினி ஜுரி, அனைத்து இலங்கையர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply