சுவிஸ் தூதரக பெண்ணுக்கு எந்தவொரு தரப்பினராலும் பிரச்சினை ஏற்படவில்லை- எஸ்.பி.

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயம் ஒரு கட்டுக்கதை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்தோடு சுவிஸ் தூதரகத்தில் வேலை செய்த இலங்கை பெண்ணுக்கு எந்தவொரு தரப்பினராலும் பிரச்சினை ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“சுவிஸ் தூதரகத்தில் வேலை செய்த இலங்கை பெண்ணுக்கு எந்தவொரு தரப்பினராலும் பிரச்சினை ஏற்படவில்லை என்றும் அவர் யாராலும் கடத்தப்படவில்லை என்றும் அரசாங்கத்துக்கு பல சாட்களில் கிடைத்துள்ளன.

இது முற்றுமுழுதாக ஒரு நாடகமாகும். அவருக்கு குறித்த தினத்தில், குறித்த நேரத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

அந்த பெண் அன்றைய தினம் சென்ற இடம், இறங்கிய இடம் உள்ளிட்டவற்றின் ஒளிப்படங்கள், காணொளிகள் என்பன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைத்துள்ளன. இதுதொடர்பான விசாரணையும் முறையாக இடம்பெறும்” என மேலும் தெரிவித்தார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *