வடக்கு ஆளுநர் நியமனத்தில் நல்லதொரு தமிழரை ஜனாதிபதி இனங்காணவில்லை – டக்ளஸ்

வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் நல்லதொரு தமிழரை ஜனாதிபதியும் பிரதமரும் இனங்காணவில்லை. அதனாலேயே ஆளுநர் நியமனத்தில் இழுபறி நிலை உள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண ஆளுநர் விடயத்தில் தமிழர் ஒருவரை நியமிக்க முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்காக நல்லதொரு தமிழரை இன்னும் ஜனாதிபதியும் பிரதமரும் கண்டுபிடிக்கவில்லை என நினைக்கிறேன். அதனால்தான் இழுபறி நிலை காணப்படுகின்றது” என மேலும் தெரிவித்தார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *