கோட்டா தலைமையில் முதலாவது அரசியலமைப்பு சபை கூட்டம் – சஜித் பங்கேற்பாரா?

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பு சபை முதன் முறையாக கூடவுள்ளது.

அதற்கமைய சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தக் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியலமைப்பு சபையில் அங்கம் வகித்த அனைவரும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை, நாடாளுமன்றம் கூடி இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்காதமை காரணமாக நாளை இடம்பெறவுள்ள அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில் அவர் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *