பலம்பொருந்திய பாதுகாப்பு அமைச்சு யாருக்கு? – ஜனாதிபதி கோட்டாவிடம் மங்கள கேள்வி

பாதுகாப்பு அமைச்சு பதவி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கேள்வியெழுப்பியுள்ளார்.

அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. குறித்த வர்த்தமானி தொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர டுவீட் செய்துள்ளார்.

அதில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்கப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சுக்களின் அளவு குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த பதிவில், “வர்த்தமானியை அவதானியுங்கள் பாதுகாப்பு என்பது ஒரு பலம்பொருந்திய ஆட்சியாளரால் வழிநடத்தப்படும், ஓர் அதி விசேட அமைச்சு போல் உள்ளது.

குறிப்பாக சமூக நன்னடத்தை, ஆட்பதிவு, அரச சார்பற்ற நிறுவனங்கள், பொலிஸ், சட்டம் மற்றும் ஒழுங்கு உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மில்லியன் ரூபாய் பெறுமதியான கேள்வி என்பது, யார் பாதுகாப்பு அமைச்சர்? என்பதே.” என பதிவிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *