2019-ல் ரொரன்ரோவில் நடந்த 66வது கொலை! புகைப்படத்துடன் பொலிசார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

கனடாவில் காரில் சென்ற நபர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

ரொரன்ரோவில் உள்ள நெடுஞ்சாலையில் காரில் மூன்று பேர் இரு தினங்களுக்கு முன்னர் இரவு 7 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இன்னொரு கார் வேகமாக வந்த நிலையில் அதிலிருந்த மர்ம நபர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை வைத்து காரில் இருந்த மூவரையும் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்

இதில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *