
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அனுராதா யஹம்பத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண அலுவலகத்தில் அவர் இன்று (வியாழக்கிழமை) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையிலே, அவர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Leave a Reply