
இலங்கை மற்றும் எகிப்துக்கு இடையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேவையை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ வலியுறுத்தியுள்ளார்.
கெய்ரோவில், இலங்கை மற்றும் எகிப்திற்கு இடையில் இருதரப்பு அரசியல் ஆலோசனை தொடர்பான ஆரம்ப நிகழ்வு வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத் தொடரில் உரையாற்றியபோதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கு இடையில் வரலாற்று ரீதியாகவும், உன்னதமான இருதரப்பு அரசியல் தொடர்புகள் மற்றும் பல துறைகளில் இரு நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
அந்தவகையில் இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளுக்காக எகிப்தை பங்குதாரராக இணைத்துக்கொள்ள வேண்டுமென்று ரவிநாத் ஆரியசிங்ஹ சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத் தொடருக்கு அமைய தலைவர்களாக எகிப்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், தூதுவர், எகிப்தின் இலங்கைக்கான தூதுவர் தமயந்தி ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply