வவுனியாவில் முஸ்லிம் இளைஞர்களின் மோசமான செயல்பாடு

வவுனியா பாலமோட்டை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் அபகரித்துச் சென்ற போது, இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் அவர்களை துரத்தி பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியா வலயன்கட்டு பரிசங்குளம் பகுதியில் வீதியில் சைக்கிளில் சென்ற இளம் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அபகரித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் கோயில் குஞ்சுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதி இளைஞர்களாலும், பொதுமக்களாலும் மடக்கப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர்கள் வவுனியா ஆண்டியா புளியங்குளத்தை சேர்ந்த முஸ்லிம் நபர்கள் எனவும் பரிசங்குளம் பகுதிக்கு மேசன் வேலைக்காக வந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *