சஜித் – ஐ.தே.க. பின்வரிசை உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்!

க்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய கூட்டத்தின்போது கட்சி சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் வரவிருக்கும் பொதுத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, இன்று கொலன்னாவ, கோட்டை மற்றும் மொரட்டுவ பகுதிகளில் நடைபெறும் பல அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *